Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவல்நிலையத்தில் புகார் வாங்க மறுப்பு: தீக்குளிக்க போவதாக நிர்மலா தகவல்

செப்டம்பர் 13, 2019 01:10

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், நகர பகுதியில் தங்கும் விடுதியை நடத்தி வருபவர் நிர்மலா. இவரிடம் முன்னாள் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி. சத்தியபாமாவின் கணவர் முறைகேடாக பேசி மிரட்டிய ஆடியோ வெளியானதாக தெரிகிறது. 

இது தொடர்பாக மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி .கோபி  காவல் நிலையத்தில் நிர்மலா புகார் அளிக்க சென்றுள்ளார்.

ஆனால் அந்த புகாரை காவல் நிலையத்தில் வாங்க மறுத்ததாகவும், இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்  காவல்நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ குளிக்கபோவதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்